இந்தியா

தேசத்தின் வளர்ச்சிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் காமராஜர்: பிரதமர் மோடி

DIN

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் காமராஜர் தனது வாழ்வை தேசத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் காமராஜரின் 119ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “மாபெரும் தலைவர் காமராஜரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன். அவர் தனது வாழ்க்கையை தேசிய வளர்ச்சி மற்றும் சமூகத்திற்காக அர்ப்பணித்தார். கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்களுக்கான அதிகாரம் ஆகியவை தொடர்பான அவரது வலியுறுத்தல்கள் தொடர்ந்து இந்திய மக்களுக்கு ஊக்கமளித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT