இந்தியா

ஹிமாசல் பேரிடர்: மறுசீரமைப்புப் பணிகள் தொடக்கம்

DIN

ஹிமாசலில் பெய்த தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

கனமழையால் வெள்ள நீர் சூழ்ந்ததால் விமான நிலையங்களும் மூடப்பட்டு பொதுப்போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.. 

தர்மசாலா பகுதியில் திங்கள் கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏராளமான கட்டடங்களும், வாகனங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. 

தர்மசாலாவின் சித்ரு பகுதியில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. அவற்றை சரிசெய்யும் பணிகளில் பொதுப்பணித் துறையினருடன், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர். 

தர்மசாலா நதி உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால், சாலைகளும், பாலங்களும் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன. 

பேரிடரில் இருந்து மீண்டு வருவதற்கு ஹிமாசலப் பிரதேசத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கும் என்று அமித் ஷா உறுதியளித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டைக் கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை: விழுப்புரம் நீதிமன்றம் விதித்தது

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவிழாவில் மோதல்: இளைஞா் கைது

உடையாா்பாளையம் பகுதியில் பழைமையான அய்யனாா் கற்சிலை

பாஜகவில் இருந்து நீக்கியதால் கவலையில்லை: கே.எஸ்.ஈஸ்வரப்பா

SCROLL FOR NEXT