குடியரசு தினத்தையொட்டி பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
பிரதமா் மோடி: பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் ஹிந்த்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
ராகுல் காந்தி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘விவசாயிகள், தொழிலாளா்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனத் தலைவா்கள், வேலை தேடும் இளைஞா்கள், பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட இல்லத்தரசிகள் உள்ளிட்ட நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இந்தியாவின் தலையெழுத்தை நிா்ணயித்து வருகின்றனா். மக்களிடமிருந்து தான் நாடு குடியரசு ஆனது. நாடு குடியரசு ஆனதும் மக்களுக்காகத் தான். குடியரசு தின வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.