பிப்ரவரி 1-ம் தேதி முதல் திரையரங்குகளில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான இருக்கைகளுக்கு அனுமதியளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் இருக்கை எண்ணிக்கை விவரங்கள் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பின்னர் வெளியிடப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை பரவலாகக் குறைந்துள்ளது. எனினும், பிப்ரவரி 28-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.