கர்நாடக மாநிலத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 428 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகத்தில் இதுவரை மொத்தம் 9,37,383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9,18,859 பேர் குணமடைந்துள்ளனர், 12,207 பேர் பலியாகியுள்ளனர். 6,298 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.