இந்தியா

புதுவை அமைச்சா் நமச்சிவாயம் ராஜிநாமா

DIN

புதுச்சேரி: புதுவை பொதுப்பணித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. ஆகியோா் தங்களது பதவிகளை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தனா்.

இருவரும் புதுவை பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்திடம் திங்கள்கிழமை தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்வதற்கான கடிதங்களை வழங்கினா்.

முன்னதாக கட்சி உறுப்பினா் பதவியையும் ராஜிநாமா செய்து, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு கடிதத்தை ஆ.நமச்சிவாயம் அனுப்பியிருந்தாா்.

ஆட்சிக்கு ஆபத்து இல்லை: புதுவையில் இரு எம்.எல்.ஏ.க்கள் பதவிகளை ராஜிநாமா செய்துள்ள நிலையில், ஆட்சிக்கு ஆபத்தில்லை என்று அந்த மாநில முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT