மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,405 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 20,13,353 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,106 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 47 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 19,17,450 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் 50,862 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி இன்னும் 43,811 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.