இந்தியா

கேரளத்தில் இன்று மேலும் 6,960 பேருக்கு கரோனா

DIN

கேரளத்தில் இன்று மேலும் 6,960 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் 61,066 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் புதிதாக 6,960 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
இதன்மூலம் மொத்த பாதிப்பு பண்ணிக்கை 8,83,540ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 72,048 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவுக்கு இன்று மேலும் 23 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,587ஆக உயர்ந்துள்ளது. 
கரோனாவிலிருந்து இன்று 5,283 பேர் குணமடைந்தனர். இதுவரை 8,08,377 பேர் குணமடைந்துள்ளனர். 2,11,824 கண்காணிப்பில் உள்ளனர். 407 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT