இந்தியா

மேற்கு வங்கத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறும்: ஆளுநர்

DIN


மேற்கு வங்கத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறும் என்று அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி வரும் ஏப்ரல் மாத இறுதியுடன் முடிவடையவுள்ளது. இதனால் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்காக பாஜக தலைவர்கள் மாநில பாஜக நிர்வாகிகளை ஊக்குவிக்கும் வகையிலும், மக்களை சந்திக்கும் வகையிலும் மேற்கு வங்கத்திற்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் தொடர்ந்து ராஜிநாமா செய்து பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் அவ்வபோது இரு கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெறும் என்று உறுதியளிப்பதாக ஆளுநர் ஜகதீப் தங்கர் தெரிவித்துள்ளார்.

நடுநிலையாகவும், வன்முறைகளின்றியும் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று ஆளுநர் உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

SCROLL FOR NEXT