கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 14,256 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
சனிக்கிழமை காலை 8 மணி வரை, புதிதாக 14,256 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,06,39,684-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றில் இருந்து மேலும் 17,130 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 10,300,838 -ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 96.82 சதவீதமாகும்.
கரோனா தொற்றுக்கு மேலும் 152 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,53,184-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
நாடு முழுவதும் 1,85,662 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, ஜனவரி 22-ஆம் தேதி வரை 19,09,85,119 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், வெள்ளிக்கிழமை மட்டும் 8,37,095 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் இதுவரை 13,90,592 சுகாதாரத் துறை ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.