இந்தியா

தில்லி அணிவகுப்பு ஒத்திகை: நாளை 2 மெட்ரோ நிலைய வாயில்கள் மூடல்

DIN

குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெறவுள்ளதால், தில்லியில் இரண்டு மெட்ரோ ரயில் நிலைய வாயில்கள் நாளை நண்பகல் வரை மூடப்படும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குடியரசு தினவிழாவையொட்டி காவலர்கள், ராணுவ வீரர்களுக்கு அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தில்லி தலைமைச் செயலகம் அருகே நாளை அணிவகுப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது.

இதனால் தில்லி தலைமைச் செயலகம் மற்றும் உத்யோக் பவன் ஆகிய இரண்டு மெட்ரோ நிலையங்களும் மூடப்படும் என்று மெட்ரொ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அணிவகுப்பு ஒத்திகைக்காக தில்லி தலைமைச் செயலகத்தின் 3,4 மற்றும் 5 ஆகிய வாயில்களும், உத்யோக் பவனின் 1 மற்றும் 2 ஆகிய வாயில்களும் நாளை (ஜன.23) நண்பகல் 12 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை

SCROLL FOR NEXT