இந்தியா

பொதுமுடக்கம் எதிரொலி: 2020-இல் ஜப்பானில் தற்கொலைகள் அதிகரிப்பு

ANI


டோக்யோ: 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானில் கடந்த 2020-இல் தற்கொலைகள் அதிகரித்திருப்பதாக நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளே, தற்கொலைகள் அதிகரிப்புக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து வெளியான அறிக்கையில், 2020-ஆம் ஆண்டு மட்டும் ஜப்பானில் 20,919 பேர்  தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது 2019-ஆம் ஆண்டைக் காட்டிலும் 750 அல்லது 3.7 சதவீதம் அதிகமாகும். 

2009-ஆம் ஆண்டு முதலே ஜப்பானில் தற்கொலைகள் தொடர்ந்து குறைந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2020-இல் 13,943 ஆண்களும், 6,976 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில்லாமல், ஜப்பானில் கடந்த 2020-ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 440 பள்ளிச் சிறார்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கரோனா பொதுமுடக்கத்தால் தங்களது வாழ்க்கை முறை, பொருளாதார காரணிகளில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்த அளவுக்கு தற்கொலைகள் அதிகரித்திருப்பதாக சுகாதாரத் துறை நம்புகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்காவில் பேருந்து விபத்தில் 45 பேர் பலி; உயிர் பிழைத்த ஒரே சிறுமி

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT