காங்கிரஸ் உள்கட்சி தேர்தல் மே மாதத்தில் நடத்தப்படும் என்று காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று (ஜன. 22) காலை காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் தில்லி எல்லையில் தொடர்ந்து வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாகவும், கரோனா பெருந்தொற்று மற்றும் தடுப்பு மருந்து குறித்தும் சோனியா காந்தி பேசினார்.
மேலும் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும், பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் பதிவு கசிவு குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.