திரிபுராவில் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்கும் மசோதாவிற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் மாநிலத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு இலவசமாக நாப்கின்கள் வழங்கப்படவுள்ளது.
இது குறித்து பேசிய கல்வித்துறை அமைச்சர் ரத்தன் லால் நாத், பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்கும் கிஷோரி சுஜிதா அபியா என்ற திட்டத்தின் கீழ் 1.68 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள்.
இந்த திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மாநில அரசு சார்பில் 3.6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் பின் தங்கிய மாணவிகளின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தபட்டுள்ளது.