ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறியத் தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணமடைந்தார்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து இந்திய தரப்பிலும் அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த சண்டையில் ராணுவ வீரர் நிர்மல் சிங் காயமடைந்தனர். பின்னர் அவர் மரணமடைந்தார். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.