தில்லியில் ஒரு கோடிக்கும் அதிகமான கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ஒரு கோடிக்கும் அதிகமான கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது தில்லியின் 50 சதவிகித மக்கள் தொகைக்கு சமமாகும்.
பரிசோதனைகளை அதிகரித்து சிகிச்சை அளிக்கும் முறையை துரிதப்படுத்தியதால் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
தில்லியில் நேற்றைய (ஜன.20) நிலவரப்படி 228 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,33,049-ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக 6,20,128 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று மட்டும் 63,161 பேருக்கு கரோனா பரிசோதனை செய்த நிலையில், இதுவரை மொத்தமாக 1,00,59,193 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.