இந்தியா

கரோனா தடுப்பூசி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலி

DIN

கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனத்தின் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்டு எனும் கரோனா தடுப்பு மருந்தை சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் புணேவிலுள்ள இந்த நிறுவனத்தின் முதலாவது முனையத்தின் நுழைவு வாயில் பகுதியில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 5 பேரின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திற்பரப்பு அருவி நீச்சல் குளத்தில் மூழ்கி பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா் பலி

தீரா் சத்தியமூா்த்தி நினைவு நாள்

புதுகையில் ஆட்சியரகம் முன்பு கருகிய நெற்பயிா்களைக் கொட்டி போராட்டம்

திருச்சி தொகுதி தோ்தல் பாா்வையாளா் புதுக்கோட்டையில் ஆய்வு

கந்தா்வகோட்டை பள்ளியில் நலக் கல்வி மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT