புது தில்லி; தில்லியின் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கடந்த ஆண்டு கரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான கட்டணமாக ரூ.2.5 லட்சம் செலவிடப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
56 வயதாகும் சத்யேந்தர் ஜெயின், கடந்த ஆண்டு ஜூன் மாதம் கரோனா உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில், கடந்த ஜூன் 19 முதல் ஜூன் 26 வரையில் சத்யேந்தர் ஜெயின் தனியார் மருத்துவமனையில் பெற்ற சிகிச்சைக்காக செலவிடப்பட்ட ரூ.2,54,898-க்கான மருத்துவக் கட்டண ரசீதை தாக்கல் செய்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டதாக தில்லி அரசின் நிர்வாகத் துறை தெரிவித்துள்ளது.