தில்லியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 227 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 227 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 6,33,276 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 8 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 10,782 ஆக உயர்ந்துள்ளது.
இன்று தொற்றில் இருந்து 246 பேர் குணமடைந்துள்ளதால் மொத்தம் 6,20,374 பேர் குணமடைந்துள்ளனர்.