கேரள சட்டப்பேரவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு எதிராக கேரள எதிர்க்கட்சி கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முன்மொழிந்த தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படாது என்று இடது முன்னணி அரசு தெரிவித்துள்ளது.
கேரள சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி 8-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்றைய (ஜன.21) பேரவைக் கூட்டத்தின்போது கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கேரள சட்டப்பேரவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு எதிரான ஐக்கிய ஜனநாயக முன்னணி தீர்மானம் முன்மொழிந்துள்ளது. தீர்மானம் மீது விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோரினர்.
இதனிடையே இது குறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஷர்மா, ஊடகங்களின் ஊகத்தின் அடிப்படையில் கொண்டுவரப்படும் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சற்று நேரம் பேரவையில் அமளி நிலவியது.