ஜனவரி 24-ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா அசாம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி மக்களை சந்திக்கும் வகையில் பேரணி மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அசாம் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர் மற்றும் பாஜக துணைத் தலைவரான பைஜெயந்த் ஜெய் பாண்டே அமித் ஷாவின் பேரணியில் கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இம்மாதத்திலேயே இரண்டாவது முறையாக அமைச்சர் அமித் ஷா அசாம் மாநிலத்திற்கு வருகை புரியவுள்ளார். ஏற்கெனவே நலத்திட்டங்களைத் துவக்கி வைப்பதற்காக அமித் ஷா அசாம் மாநிலத்திற்கு வருகை புரிந்திருந்தார்.
அரசு திட்டங்களுக்காக கடந்த முறை அசாம் மாநிலத்திற்கு சென்ற நிலையில், இம்முறை சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்காக வருகை புரியவுள்ளார்.