நடப்பு காரீஃப் சந்தை பருவத்தில் கடந்த திங்கள்கிழமை வரை குறைந்தபட்ச ஆதரவு விலையில் ரூ.1.07 லட்சம் கோடி மதிப்பிலான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நடப்பு காரீஃப் சந்தை பருவத்தில் கடந்த திங்கள்கிழமை வரை ரூ.1,07,572 கோடி மதிப்பிலான 569.76 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நடைபெற்ற நெல் கொள்முதலைவிட சுமாா் 24% அதிகமாகும்.
இந்த ஆண்டு இதுவரை செய்யப்பட்ட நெல் கொள்முதல் மூலம் சுமாா் 80.35 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா். மொத்த நெல் கொள்முதலில் அதிகபட்சமாக பஞ்சாபில் இருந்து 202.77 லட்சம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.