உத்தரப் பிரதேசத்தில் கனரக டிப்பர் லாரிகள் ஒன்றொடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தின் நஹ்தோரா கிராமத்தில் லாரிகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இரு லாரிகளின் ஓட்டுநர்கள் உள்பட லாரி உதவியாளர் ஒருவர் என மூன்று பேர் உயிரிழந்தனர்.
அவர்களது உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.