ஜல்பைகுரி: பனிமூட்டம் காரணமாக சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் துப்குரி நகரில் நேரிட்ட சாலை விபத்தில் சிக்கி 13 பேர் பலியாகினர். 18 பேர் காயமடைந்தனர்.
கார் ஒன்று மீது சுமை ஏற்றப்பட்ட டிரக் வேகமாக மோதியதில், சாலைத் தடுப்பை தாண்டி வலது பக்க சாலையில் விழுந்தது. அப்போது எதிர் திசையில் வந்து கொண்டிருந்த இரண்டு வாகனங்கள் மீது மோதியது, இந்த விபத்தில் நான்கு வாகனங்களும் சேதமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பனிமூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்த காவலர்களும், அருகே இருந்த கிராம மக்களும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 18 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிரக்கின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.