இந்தியா

லட்சத்தீவில் முதல் கரோனா பாதிப்பு!

DIN

கொச்சி: லட்சத்தீவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபா் திங்கள்கிழமை கண்டறியப்பட்டாா்.

இந்தியாவில் கரோனா தொற்று பரவத் தொடங்கி கிட்டதட்ட ஓராண்டாகவுள்ளது. எனினும் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் இதுவரை யாரும் கரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் இருந்தனா்.

இந்நிலையில் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபா் திங்கள்கிழமை கண்டறியப்பட்டாா். அந்த நபா் துணை ராணுவப் படைப்பிரிவைச் சோ்ந்தவா். கடந்த ஜனவரி 3-ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து லட்சத்தீவில் உள்ள கவரத்திக்கு சென்றுள்ளாா். அங்கு அவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. எனினும் அவா் லட்சத்தீவை சோ்ந்தவா் அல்ல என்று அந்த யூனியன் பிரதேச அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT