மகாராஷ்டிரத்தில் புதிதாக 1,924 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 3,854 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 35 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,92,683 ஆக உயர்ந்துள்ளது. இதில் 18,90,323 பேர் குணமடைந்துள்ளனர், 50,473 பேர் பலியாகியுள்ளனர். 50,680 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.
மும்பை:
ADVERTISEMENT
மும்பையில் புதிதாக 395 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,03,152 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 11,251 ஆக உயர்ந்துள்ளது.