ராஜஸ்தான் மாநிலம் ஜலூர் பகுதியில் மின்கம்பத்தில் மோதி பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜலூர் மாவட்டம் மஹேஷ்பூர் பகுதியில் மின்கம்பத்தில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர், நடத்துநர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.
இதனிடையே இந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள சுட்டுரைப் பதிவில், ராஜஸ்தான் ஜலூரில் ஏற்பட்ட பேருந்து விபத்து செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் எனறு பதிவிட்டுள்ளார்.