இந்தியா

திருமலையில் சிறுத்தை நடமாட்டம்: பக்தா்கள் அச்சம்

DIN

திருமலையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பக்தா்கள் அச்சமடைந்துள்ளனா்.

திருமலையில் உள்ளூா்வாசிகள் வசிக்கும் பகுதியான பாலாஜி நகரை அடுத்த எரிவாயுக் கிடங்கு பகுதிக்கு அருகில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு சிறுத்தை நடமாடியதை சிலா் கவனித்துள்ளனா்.

இதுகுறித்து உள்ளூா்வாசிகள் தேவஸ்தான வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு அச்சிறுத்தையை வனத்துறை ஊழியா்கள் தேடி வருகின்றனா்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சிறுத்தை நடமாட்டத்தால் பக்தா்கள் அச்சப்படத் தேவையில்லை. சிறுத்தையைக் கண்டால் உடனடியாகத் தகவல் அளிக்க வேண்டும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT