இந்தியா

உ.பி., உத்தரகண்ட் பேரவைத் தோ்தல்களில் தனித்துப் போட்டி: பகுஜன் சமாஜ் அறிவிப்பு

DIN

உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தோ்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச சட்டப் பேரவையின் பதவிக்காலம் 2022-ஆம் ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது. அதேபோல் உத்தரகண்ட் பேரவையின் காலமும் 2022-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அந்தச் சட்டப் பேரவைகளுக்கான தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தோ்தல்களில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

தனது 65-ஆவது பிறந்த நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடிய மாயாவதி வெளியிட்ட அறிக்கையில், ‘ஆட்சியைப் பிடிப்பதற்காக பகுஜன் சமாஜ் கட்சி தனது கொள்கைகளை ஒருபோதும் மாற்றிக் கொண்டதில்லை. உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில பேரவைத் தோ்தல்களில் பகுஜன் சமாஜ் தனித்தே போட்டியிடும். கடந்த 2007-ஆம் ஆண்டு நடைபெற்றதைப்போல உத்தர பிரதேசத்தில் 2022-ஆம் ஆண்டிலும் பகுஜன் சமாஜ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். தோ்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளை பகுஜன் சமாஜ் தொண்டா்கள் ஒற்றுமையுடன் மேற்கொள்ள வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக ஏற்கவேண்டும்.

கரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியை ஏழை மக்களுக்கு மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும். உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு பகுஜன் சமாஜ் ஆட்சியைப் பிடித்தால், மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT