கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது எனில் அரசு பிரதிநிதிகள் யாரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதது ஏன் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
கரோனா தொற்று பாதிப்பைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்நிலையில் கரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி அரசு பிரதிநிதிகள் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பிற நாடுகளில் அரசின் சார்பில் பிரதமர்களும், சுகாதார அமைச்சர்களும் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளும்போது இங்கு மட்டும் அரசுப் பிரதிநிதிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தவிர்ப்பதாகவும் குறித்தும் மணீஷ் திவாரி குறிப்பிட்டுள்ளார்.