இந்தியா

6 மாதங்களுக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி: ராஜஸ்தான் முதல்வர்

DIN

ஆறு மாதங்களுக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று (ஜன.16) காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் ராஜஸ்தானில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை முதல்வர் அசோக் கெலாட் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் பேசிய அவர், ''இந்த நாளுக்காக தான் அனைவரும் காத்திருந்தோம். இறுதியாக கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ராஜஸ்தானில் 167 மையங்களில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறது.

ஒவ்வொரு நபருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். அரையாண்டுக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். அதுவரை அனைவரும் கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்'' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

SCROLL FOR NEXT