ராஜஸ்தான்-ஹரியாணா எல்லையில் நடைபெறும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 400 கேரள விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.
இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ அம்ரா ராம் தெரிவித்தது:
"கேரளத்திலிருந்து விவசாயிகள் குழு ஒன்று வெள்ளிக்கிழமை போராட்டத்தில் பங்கேற்றது. நெடுஞ்சாலையில் 3 கி.மீ. தூரத்துக்கு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடுமையான குளிருக்கு மத்தியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அரசு அதுகுறித்து கவலை கொள்ளவில்லை."