இந்தியா

ரூ.49 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

DIN


கொச்சி: கேரளம் மாநிலம் கண்ணூர் விமான நிலையத்தில் ரூ.49 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஷார்ஜா, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வரும் விமானப் பயணி மூலம் தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், விமானம் மூலம் வந்த கண்ணூர் விமான நிலையம் வந்த பயணிகளிடம் கொச்சி சுங்கத்துறையினா் நடத்திய சோதனையின்போது, பயணி ஒருவர் தனது மலக்குடலுக்குள் மாத்திரை வடிவிலான நான்கு தங்கக்கட்டிகளை மறைத்து தங்கம் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்தும் ரூ.49,08,960 லட்சம் மதிப்பிலான 974 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கொச்சி சுங்கத்துறை ஆணை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தவறான தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு எதிராக இந்தியா ஒத்துழைப்பு: அஜீத் தோவல்

முழுநேர கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப்பயிற்சி: ஏப்.29 இல் முன்பதிவு தொடக்கம்

395 தரமற்ற விதை மாதிரிகள் கண்டுபிடிப்பு

பாலஸ்தீன ஐ.நா. பிரிவுக்கு மீண்டும் நிதியுதவி: ஜொ்மனி அறிவிப்பு

ஆரம்ப சுகாதார மையத்தை சேதப்படுத்தியவா் கைது

SCROLL FOR NEXT