ஹிமாலப் பிரதேசம், கின்னூர் மாவட்டத்தில் நகோ அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் நூற்றுக்கணக்காக மக்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பனிப்பொழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக லஹால்-ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள காசா துணைப்பிரிவின் சாலை இணைப்பு மற்றும் கின்னூர் மாவட்டத்தின் பல கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.
ADVERTISEMENT
கின்னூர்-காசா சாலையில் ஏற்பட்ட கற்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
நிலச்சரிவு காரணமாக சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிக்கித் தவித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.