கௌஹாத்தி: அசாம் தலைநகர் குவாஹாட்டியில் ட்ரக் ஒன்றில் 500 கிலோ கஞ்சா கடத்திய நபர் கைது செய்யபட்டார்.
இதுதொடர்பாக குவாஹாட்டி நகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குவாஹாட்டியில் ட்ரக் ஒன்றில் 500 கிலோ கஞ்சா கடத்திய நபர் கைது செய்யப்படுள்ளார். அவரிடம் இருந்து தலா 50 கிலோ எடை கொண்ட பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் அந்த ட்ரக்கின் ஓட்டுனர் ஆவார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.