மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி இருசக்கர வாகனத்தில் பேரணி மேற்கொண்டார்.
மேற்கு வங்க மாநிலத்தில் தற்போதைய ஆட்சி வரும் மே மாதத்துடன் முடிவடையவுள்ளதால், அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி திரிணமூல், பாஜக போன்ற அரசியல் தலைவர்கள் மேற்கு வங்கத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் இன்று மேற்கு வங்க மாநிலம் பஞ்ச்போட்டாவில் பாஜக சார்பில் வாகனப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்துகொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி பேரணியில் ஈடுபட்டார். இதில் பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பேரணியாக வாகனத்தை இயக்கிச் சென்றனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பெட்ரோல், டீசல் விலையர்வைக் கண்டித்து நேற்று (பிப்.25) இருசக்கர வாகனத்தில் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.