மேற்கு வங்கத்தில் பேரணியைத் தடுத்து நிறுத்தியதால் பாதுகாப்புப்படையினருடன் பாஜகவினர் மோதலில் ஈடுபட்டனர்.
பரிவர்தன் யாத்திரை என்ற பெயரில் பாஜகவினர் மேற்கொண்ட பேரணியை பாதுகாப்புப்படையினர் தடுத்து நிறுத்தியதால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மேற்கு வங்க மாநிலம் பராக்பூர் பகுதியில் பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பாதுகாப்புப்படையினர் பாஜகவினரை தடுத்து நிறுத்தினர்.
இதில் ஆத்திரமடைந்த பாஜகவினர் பாதுகாப்புப்படையினருடன் மோதலில் ஈடுபட்டனர். பாதுகாப்புப்படையினரும் தடியடி நடத்தியதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.