நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 60 சதவீதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
கரோனா பெருந்தொற்றை தடுக்கும் ஆயுதமாக உலகம் முழுவதும் முழு வீச்சில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஜனவரி 16, 2020 முதல் பல கட்டங்களாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகின்றன.
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இதுவரை 139.70 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் இன்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
“மக்கள் பங்கேற்பு மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் அர்பணிப்புடன் கூடிய முயற்சியால், 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.”