புது தில்லி: நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் முன்கூட்டியே நிறைவடைய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நவ.29-ஆம் தொடங்கிய நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் டிச.23-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனது நாடாளுமன்ற செயல்திட்டங்களில் பெரும்பாலானவற்றை மத்திய அரசு நிறைவு செய்துவிட்டதால், கூட்டத்தொடா் புதன்கிழமையே (டிச.22) முடிவடைய வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.