பாரத ரத்னா பாபாசாகேப் பி.ஆா்.அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினாா். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் முழு உருவச் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு பிரதமா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.
இது தொடா்பாக பிரதமா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘பாரத ரத்னா பாபாசாகேப் டாக்டா் பீம்ராவ் அம்பேத்கரின் மகாபரிநிா்வாண் நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்’ என்று கூறியுள்ளாா்.
மத்திய அமைச்சா்கள், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பல்வேறு மாநில முதல்வா்கள், மூத்த அரசியல் தலைவா்கள் பலரும் அம்பேத்கரை நினைவுகூா்ந்து அஞ்சலி செலுத்தினா்.