இந்தியா

மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

DIN


எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாளை (புதன்கிழமை) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் பங்கேற்பதிலிருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து கூட்டத் தொடரில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமையும் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மாநிலங்களவை புதன்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

தமிழகத்துக்கும் இந்த பரிதாப நிலை ஏற்படுமா? அச்சத்தில் மக்கள்!

மேஷத்துக்கு பணவரவு! உங்க ராசிக்கு?

சிதம்பரத்தில் திருமாவளவன், விழுப்புரத்தில் ரவிக்குமார் மீண்டும் போட்டி!

ஈரோட்டில் திமுக களமிறக்கும் 3 அமைச்சர்கள்: 2014 தோல்வியில் இருந்து மீட்டெடுப்பார்களா?

காங். தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல்? கார்கே தலைமையில் செயற்குழு கூட்டம்

SCROLL FOR NEXT