எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாளை (புதன்கிழமை) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் பங்கேற்பதிலிருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து கூட்டத் தொடரில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமையும் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மாநிலங்களவை புதன்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.