மகாராஷ்டிர மாநிலம் புணேவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரளில் 7 பேருக்கு அறிகுறிகள் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற ஆரம்பகட்ட அறிகுறிகள் மட்டுமே உள்ளதாகவும் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இன்று (டிச.7) 7 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 4 பேர் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ள கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவற்றில் ஒன்றை போட்டுக்கொண்டவர்கள்.
எஞ்சிய மூவரும் 18 வயதுக்கு குறைவானவர்கள். அதில் ஒன்றரை வயது குழந்தை, 7 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
வழக்கமான கரோனா பரிசோதனையின்போது இவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் கடந்த மாதம் 18 முதல் 25-ஆம் தேதி வரை பின்லாந்து நாட்டிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு 29-ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் அவர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.