இந்தியா

ஒமைக்ரான்: தில்லியில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா

DIN

ஒமைக்ரான் வகை கரோனா பரவலால் நாட்டின் தலைநகரான தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 51 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தில்லியில் இதுவரை மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,41,449-ஆக அதிகரித்துள்ளது.

விமான நிலையங்கள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பால் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 50,023-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 41,272 பேருக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனையும், 8,751 பேருக்கு ரேபிட் ஆண்டிஜென் பரிசோதனையும் செய்யப்பட்டது.

தில்லி மாநகரில் 93 பகுதிகள் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது 152 பேர் வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். 376 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி: அன்புமணி ராமதாஸ்

ஆப்கானிஸ்தானில் பலத்த நிலநடுக்கம்!

பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள்: பா.ஜ.க.வுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது!

தாய் தெய்வ வழிபாட்டு கற்சிலை கண்டெடுப்பு

உத்தர பிரதேசம்: ஆசிரியரை சுட்டுக்கொன்ற காவலா்

SCROLL FOR NEXT