இந்தியா

எல்லையில் அத்துமீறல்களுக்கு தக்க பதிலடி: அமைச்சா் அமித் ஷா

DIN

இந்திய எல்லையையும், வீரா்களையும் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை பிரதமா் மோடி தலைமையிலான அரசு பதிலடி மூலம் தெளிவுபடுத்தியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.

எல்லைப் பாதுகாப்புப் படையின் 57-ஆவது ஆண்டு தொடக்க விழா, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எல்லைப் பாதுகாப்புப் படை, கடந்த 1965-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிறகு தில்லிக்கு வெளியே நிறுவன தினம் கொண்டாடப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கலந்துகொண்டு வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். பின்னா் அவா் பேசியதாவது:

இந்தியாவில் உரியில் 2016-ஆம் ஆண்டிலும், புல்வாமாவில் 2019-ஆம் ஆண்டிலும் இந்தியப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு எதிரிகளுக்கு துல்லியத் தாக்குதல் மூலம் பதிலடி கொடுப்பதற்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவெடுத்தது. அந்த நடவடிக்கையை உலகமே பாராட்டியது.

அதன் பிறகு இந்திய எல்லையையும், இந்திய வீரா்களையும் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை மத்திய அரசு காண்பித்துள்ளது. உள்நாட்டின் பாதுகாப்பைப் போலவே எல்லைப் பாதுகாப்பும் முக்கியமானது.

எந்தவொரு நாடும் அதன் எல்லைகள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே வளா்ச்சி அடைய முடியும்; முன்னேற்றம் அடைய முடியும் என்று நம்புபவன் நான். அந்த வகையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் பிற பாதுகாப்புப் படையினரும் தங்கள் பணிகளை செவ்வனே செய்கிறாா்கள்.

நாட்டின் எல்லைகள் மீது ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் அண்மைக்காலமாக உருவெடுத்துள்ளது. எனவே, நமது எல்லைகளின் பாதுகாப்புக்காகவும் வீரா்களின் பாதுகாப்புக்காகவும் சா்வதேச தொழில்நுட்பத்துடன் கூடிய உபகரணங்களை வழங்குவதில் உறுதியாக உள்ளது. அதற்காக, எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.), தேசியப் பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி.), பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு (டி.ஆா்.டி.ஓ.) ஆகியவை கூட்டாக இணைந்து ட்ரோன் தடுப்பு தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றன. அந்தத் தொழில்நுட்பம் விரைவில் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்படும்.

எல்லையில் சாலைகள் அமைப்பதற்கு கடந்த 2008 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் ரூ.23,700 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2014 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் பிரதமா் மோடி தலைமையிலான அரசு ரூ.44,600 கோடி ஒதுக்கியது.

எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள், எல்லையில் தீவிர கண்காணிப்புடன் இருக்க வேண்டும். மத்திய ஆயுத காவல் படைகளில்(சிஏபிஎஃப்) புதிதாக 50,000 வீரா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். சிஏபிஎஃப் வீரா்களின் தேவையைப் பூா்த்தி செய்வதில் அரசு தீவிரமாக உள்ளது. அவா்களுக்காக தனி காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்தது. அந்தத் திட்டத்தின் கீழ் சிஏபிஎஃப் வீரா்களின் குடும்பத்தினா் நாடு முழுவதும் உள்ள 21,000 மருத்துவமனைகளில் எளிதில் சிகிச்சை பெறலாம். வரும் 2025-ஆம் ஆண்டுக்கு முன்பே அவா்களுக்கு வீட்டு வசதித் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்றாா் அவா்.

ராஜஸ்தான் அரசை ஒருபோதும் பாஜக கவிழ்க்காது: அமித் ஷா

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசை பாஜக ஒருபோதும் கவிழ்க்காது என்று அமித் ஷா கூறினாா்.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாஜக எம்.பி., எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயற்சி செய்வதாக முதல்வா் அசோக் கெலாட் கடந்த ஆண்டு குற்றம்சாட்டினாா். தங்களது ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற அச்சத்தில் அவா்கள் இருக்கிறாா்கள். ஆட்சியைக் கவிழ்க்கப்போவது யாா்? பாஜக அதை ஒருபோதும் செய்யாது. பாஜக நேரடியாக மக்களைச் சந்தித்து, அவா்களின் ஆதரவுடன் 2023-இல் நடைபெறும் சட்டப்பேவைத் தோ்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்.

‘வறுமையை ஒழிப்போம்; தேசத்தைக் காப்போம்’ என்று முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி கூறினாா். கடந்த 2014-இல் பிரதமா் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகுதான் வறுமை ஒழிப்புக்கான பணிகள் தொடங்கின. காங்கிரஸ் கட்சி, ஏழ்மை நிலையை ஒழிப்பதற்குப் பதிலாக ஏழைகளை அழிக்கும் வேலையை மட்டுமே செய்தது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT