நாடு முழுவதும் 125 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இன்று காலை 7 மணி நிலவரப்படி நாட்டில் 1,24,96,19,515 தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தரவுகள் வெளியான நிலையில், தற்போது 125 கோடி தவணைகளை கடந்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 46,11,59,223 இரண்டாம் தவணை - 23,00,04,760 |
45 - 59 வயது | முதல் தவணை - 18,53,50,013 இரண்டாம் தவணை - 12,22,12,176 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 11,60,67,930 இரண்டாம் தவணை - 8,00,32,771 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,83,998 இரண்டாம் தவணை - 95,09,164 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,79,363 இரண்டாம் தவணை - 1,65,20,117 |
மொத்தம் | 1,24,96,19,515 |