ஜம்மு-காஷ்மீரில் உள்ள பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதி செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘‘சந்தாஜி வனப் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தென்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினரும் போலீஸாரும் சுற்றிவளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா். அவா்களுக்கு பாதுகாப்புப் படையினா் தக்க பதிலடி அளித்தனா்.
இந்த மோதலில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்த பாபா் அலி என்பவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். இவா் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள உகாடா மாவட்டத்தைச் சோ்ந்தவா்.
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பகுதியில் இருந்து ஒரு ஏகே ரக துப்பாக்கி, 40 துப்பாக்கி குண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன’’ என்று தெரிவித்தாா்.
10 பயங்கரவாதிகள் பட்டியல்: ஜம்மு-காஷ்மீரில் முக்கிய பயங்கரவாதிகள் 10 பேரை குறிவைத்துள்ளதாக காஷ்மீா் போலீஸாா் தெரிவித்துள்ளனா். அந்த பயங்கரவாதிகளின் பெயா் பட்டியலை சுட்டுரையில் திங்கள்கிழமை இரவு போலீஸாா் வெளியிட்டனா்.