ஷாஜஹான்பூா்: உத்தர பிரதேசத்தில் ரயில் பாதையை கடக்க முயன்ற வாகனங்கள் மீது ரயில் மோதியதில் 5 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து போலீஸாா் தெரிவித்துள்ளதாவது:
லக்னௌவிலிருந்து பஞ்சாப் மாநிலம், சண்டீகா் செல்லும் அதிவிரைவு ரயில் வியாழக்கிழமை காலை மீரன்பூா் கட்ரா ரயில் நிலையத்தை கடந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விரைவு ரயில் வரும்போது ரயில் பாதை கதவுகள் மூடாமல் இருந்துள்ளன. அப்போது அந்த ரயில் பாதை வழியை கடக்க முயன்ற இரண்டு லாரிகள், ஒரு காா் மற்றும் ஒரு மோட்டா் சைக்கிள் மீது ரயில் வேகமாக மோதியுள்ளது. இதையடுத்து, ரயில் தண்டவாளத்தை விட்டு தடம் விலகி நின்றது.
அதிகாலை 5.10 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 5 போ் உயிரிழந்தனா். ஒருவா் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என போலீஸாா் தெரிவித்தனா்.