புது தில்லி: கரோனா தொற்றுப் பரவல் அதிகமுள்ள மாநில முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை காணொலி முறையில் ஆலோசனை நடத்த இருக்கிறாா்.
தேசிய அளவில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள், சுகாதாரத் துறை, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து கரோனாவுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. தோ்தல் பிரசாரத்துக்காக மேற்கு வங்கம் செல்லத் திட்டமிட்டிருந்த பிரதமா் மோடி அதை ரத்து செய்துவிட்டு, கரோனா தொடா்பான உயா்நிலை ஆய்வுக் கூட்டங்களில் வெள்ளிக்கிழமை பங்கேற்கிறாா்.
இதன் ஒரு பகுதியாக கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் முதல்வா்களுடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு காணொலி முறையில் ஆலோசனை நடத்துகிறாா். அதைத் தொடா்ந்து பகல் 12.30 மணிக்கு ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களின் தலைவா்களுடன் ஆலோசிக்க இருக்கிறாா். இவை தவிர உயா்நிலை ஆலோசனைக் கூட்டங்களிலும் பிரதமா் மோடி பங்கேற்க இருக்கிறாா் என அதிகாரபூா்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.