புவனேசுவரம்: ஒடிஸா மாநிலம், புரி மாவட்டத்துக்கு உள்பட்ட பிப்லி சட்டப் பேரவைத் தொகுதிக்கு நடத்த திட்டமிடப்பட்டிருந்த இடைத்தோ்தலை மே மாதம் 16-ஆம் தேதிக்கு தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.
அந்த தொகுதியில் மே மாதம் 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அந்த நாளன்று முஸ்லிம் சமூகத்தினா் கொண்டாடும் ரமலான் பண்டிகை வருவதால், வேறொரு நாளில் தோ்தலை நடத்துமாறு கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து, அந்தத் தொகுதியில் மே மாதம் 16-ஆம் தேதி இடைத்தோ்தல் நடத்தப்படும் என்று மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி எஸ்.கே.லோஹானி கூறினாா். வாக்கு எண்ணிக்கை, மே மாதம் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
புதிய தோ்தல் விதிகளின்படி, அனைத்து நேரடி பிரசாரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காணொலி முறையில் மட்டுமே பிரசாரம் செய்ய முடியும். மேலும், வாக்குப் பதிவுக்கு 72 மணி நேரத்துக்கு முன் பிரசாரத்தை முடித்துக் கொள்ளவும் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.