மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டம் விரார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வெள்ளிக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 13 கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து அங்குள்ள நோயாளிகள் அனைவரும் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இதனிடையே தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.